Tag / ஆசாரம்

(ஐயப்ப பக்தர்கள் சங்கமம், திருவனந்தபுரம், ஜனவரி 20, 2019) அன்பின் வடிவாகவும் ஆன்மாவின் வடிவாகவும் இங்குள்ள அனைவருக்கும் அம்மாவின் பணிவான வணக்கங்கள்.அண்மையில் சபரிமலை திருக்கோவில்     தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகள் யாவும் வருந்தத்தக்கவையாகும். திருக்கோவில் பிரதிஷ்டையை பற்றியும் ஆலய வழிபாடு முறைகள் பற்றியும் ஞானம் இல்லாதது தான் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம்.ஒவ்வொரு ஆலயத்திற்கும் அதற்குரிய பிரதிஷ்டை சங்கல்பம் உள்ளது. அதை அலட்சியம் செய்வது சரியல்ல.  ஆலயத்தில் உள்ள ‌‌விக்கிரகத்திற்கும் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். […]

பயபக்தியும் அறிவியலும் கட்டுரையின் தொடர்ச்சி…. கேள்வி: மனிதனிடம் பயபக்தியை வளர்க்கும் மதத்தைவிட இயற்கையைப் பற்றிக் கற்பிக்கும் நவீன அறிவியல் அல்லவா சிறந்தது? அம்மா: மதத்தில் இல்லாத எதையும் அறிவியலில் காணமுடியாது. மதம் இயற்கையைக் காப்பாற்றுமாறுதான் கூறுகிறது. அனைத்தையும் இறைவனாகக் கண்டு அன்பு செலுத்தவும், தொண்டு செய்யவுமே மதம் கற்பிக்கிறது. மலைகளையும், நதிகளையும், மரங்களையும், காற்றையும் சூரியனையும், பசுக்களையும் ஒவ்வொரு விதத்தில் நம் முன்னோர் ஆராதித்து வந்தனர். பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய் அனைத்தும் நமக்கு கிடைப்பதுபோல், மதத்திலிருந்து […]

பயபக்தியும் அறிவியலும் நமது எல்லாச் செயல்களிலும் பயபக்தியைக் காணலாம். பயம் இருப்பதால்தான் நாம் எதையும் கவனமாகச் செய்கிறோம். இல்லாவிடில், நமக்குச் சிரத்தை வருவது கடினம். நடக்கும்போது கவனமாக இருப்பது, விழுந்துவிடுவோம் என்ற பயத்தால் ஆகும். ஒவ்வொருவரும் அவரவர் இயல்புக்கேற்ப மனதில் தோன்றியதைப் பேச ஆரம்பித்தால், அனாவசியமான பலவற்றைப் பேசநேரிடும். அது பின்னர் வழக்கானால் சிறைக்குச் செல்ல நேரிடும். அந்தப் பயத்தால் பேச்சிலும், செயலிலும் கவனம் செலுத்துகிறோம். சிரத்தையுடன் படிப்பது தேர்வில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால்தான். இப்படிப் பார்த்தால் […]