Category / ஸநாதன தர்மம்

கேள்வி: விக்கிரக வழிபாடு என்ற பெயரில் சிலர் இந்துமதத்தை நிந்திக்கிறார்களே! இதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? அம்மா: எந்த நோக்கத்துடன் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஏதாவது ஒரு வகையில் விக்கிரக வழிபாடு எல்லா மதங்களிலும் இருக்கிறது. கிறிஸ்துவ மதத்தில் உண்டு ; இஸ்லாம் மதத்தில் உண்டு; புத்த மதத்தில் உண்டு; கிறிஸ்தவ மதத்தில் பாயாஸ நைவேத்தியமும், மலர் அர்ச்சனையும் இல்லை; அவ்வளவுதான். அதற்குப் பதிலாக மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள். ரொட்டியைக் கிறிஸ்துவின் உடலாகவும், திராட்சை மதுவை […]

கேள்வி: விக்கிரக ஆராதனையின் (உருவ வழிபாடு) தத்துவம் என்ன? அம்மா: உண்மையில் இந்துக்கள் விக்கிரகத்தை (கல்லை) வணங்குவதில்லை. எங்கும் நிறைந்திருக்கும் தெய்விக சைதன்யத்தைத்தான் விக்கிரகத்தின் மூலம் வணங்குகின்றனர். தந்தையின் படத்தைக் காணும் மகன் , அதை வரைந்த ஓவியரை நினைப்பதில்லை; தந்தையையே நினைவு கூர்கிறான்.காதலி அளித்த ஒரு பேனாவையோ, கைக்குட்டையையோ காணும்போது காதலன் தனது காதலியை நினைக்கிறானே அன்றி அந்தப் பொருட்களை நினைப்ப தில்லை. அவன் அதற்குப் பதிலாக வேறு எந்தப் பொருட்க ளைக் கொடுப்பதாகக் கூறினாலும் […]

கேள்வி: மனித வாழ்வில் இறை நம்பிக்கையின் அவசியம் என்ன? அம்மா: இறை நம்பிக்கை இல்லாமலும் வாழ முடியும். ஆனால், வாழ்வின் பாதகமான சூழ்நிலைகளில் மனம் பதறாமல் உறுதியாக முன்னேறிச் செல்ல வேண்டுமெனில், நாம் கடவுளைச் சரண்புகத் தயாராக வேண்டும். அவருடைய பாதையைப் பின்பற்றி வாழத் தயாராக வேண்டும். இறைவனை அடைக்கலம் அடையாத வாழ்க்கை, நீதிபதி இல்லாமல் இரு வழக்கறிஞர்கள் மட்டும் வாதாடுவது போன்றதாகும்.வெறும் வாதம் மட்டும் எந்தவொரு முடிவையும் அளிக்காது.வாதத்திற்குத் தீர்ப்பு எழுத வேண்டுமெனில் நீதிபதி தேவை. […]