கோவிட்-19 நோயைக் கட்டுப் படுத்தி, அதன் தாக்கத்தை முறியடிக்கும் முயற்சிகளில் பங்கேற்கும் விதமாகவும், இந்நோயால் உடல், மனம், பொருளாதாரம் இவை பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு ஆறுதல் தரும் வகையிலும் மாதா அமிர்தானந்தமயி மடம் ரூ 13 கோடியை (1.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நன்கொடை அளிப்பதாக இன்று அறிவித்துள்ளது. இதில் ரூ. 10 கோடி, பாரதப் பிரதமரின் பி எம் – கேர்ஸ் (PM-CARES) நிதிக்காக்கவும் ரூ. 3 கோடி கேரள அரசின் முதல்வர் அவசரநிலை நிதிக்காகவும் வழங்கப்படுகிற்து. அதோடு, மடம் கொச்சியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் (அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் ஸைன்ஸஸ்) கோவிட்-19 ஆல் பாதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்கு இலவச சிகிச்சையும் அளிக்கும்.
![](https://www.amritapuri.org/images/2020/04/20ammapraying.jpg)
“உலகம் முழுமையுமே பாதிக்கப்பட்டு வலியில் அழுவதைக் காண்கையில் என் இதயம் வேதனயால் துடிக்கிறது” என்று அம்மா, இன்று மடத்திலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ” இந்நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் மன அமைதி பெறவும், உலகம் சாந்தி பெறவும் நாமெல்லாம் இறைவனின் அருள் வேண்டிப் பிரார்த்திப்போம்.”
அம்மா கேட்டுக்கொண்டபடி, அமிர்தா மருத்துவமனை, இலவச மன நல ஆலோசனை தருவதற்க்கென அவசரத் தொலை பேசித் தொடர்பு (24-மணியும் இயங்கக் கூடிய) ஓர் ‘ஹாட் லைன்’ (0476 280 5050) வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நோயின் காரணமாக மன அழுத்தம், கவலை, மனத் தாழ்ச்சி அடைந்துள்ளவர்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு இலவச மன நல ஆலோசனை பெறலாம். சென்ற வாரம் அம்மா இம் மருத்துவமையின் டாக்டர்கள், மன நோய் மருத்துவர்கள், மன நல ஆலோசகர்களிடம் இவ்விதமான சேவைக்கென நேரம் ஒதுக்குமாறு பொதுவான ஓர் வேண்டுகோள் விடுத்திருந்தார். “இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு மன நல ஆலோசனை அவசியமான ஒன்று; இதை என் வேண்டுகோளாக ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இறை நம்பிக்கை உள்ளவராகவோ, இல்லாதவராகவோ இருக்கலாம்; ஆனாலும் ஒரு நாளைக்கு ஓரிரு மணி நேரமாவது இவ்விதமான ஆலோசனை தேவைப் படுவோர்க்கு இலவசமாய் அதை வழங்க நேரம் ஒதுக்குங்கள்” என்று சொல்லியிருந்தார் அம்மா.