Tag / மனத்தூய்மை

ஐவகை யக்ஞங்களும் அவற்றின் தத்துவமும் கட்டுரையின் தொடர்ச்சி ….. கேள்வி: ஆன்மிக சாதனைகளுக்கும், இயற்கைப் பாதுகாப்பிற்கும் இடையிலுள்ள ஒற்றுமைகள் என்னென்ன? அம்மா: “ஈசாவாஸ்யமிதம் ஸர்வம்“. அனைத்திலும் ஈசனின் சைதன்யமே நிறைந்துள்ளது என்றே நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே, நம்மைப் பொறுத்தவரை, இயற்கைப் பாதுகாப்பு என்பது இறை ஆராதனையே ஆகும். பாம்பைக்கூட வணங்கும் பண்பாடே நம்மிடம் உள்ளது. அனைத்திலும் இறைவனைக் கண்டு, அனைத்தையும் இறைவனாக வணங்கும்படியே மதம் கூறுகிறது. இந்த உணர்வு இயற்கைமீது அன்பு செலுத்த நமக்குக் கற்பிக்கிறது. […]

கேள்வி: விக்கிரக ஆராதனையின் (உருவ வழிபாடு) தத்துவம் என்ன? அம்மா: உண்மையில் இந்துக்கள் விக்கிரகத்தை (கல்லை) வணங்குவதில்லை. எங்கும் நிறைந்திருக்கும் தெய்விக சைதன்யத்தைத்தான் விக்கிரகத்தின் மூலம் வணங்குகின்றனர். தந்தையின் படத்தைக் காணும் மகன் , அதை வரைந்த ஓவியரை நினைப்பதில்லை; தந்தையையே நினைவு கூர்கிறான்.காதலி அளித்த ஒரு பேனாவையோ, கைக்குட்டையையோ காணும்போது காதலன் தனது காதலியை நினைக்கிறானே அன்றி அந்தப் பொருட்களை நினைப்ப தில்லை. அவன் அதற்குப் பதிலாக வேறு எந்தப் பொருட்க ளைக் கொடுப்பதாகக் கூறினாலும் […]