Tag / அன்பு

அன்பு என்பது நம்மிடமே இருந்தும் நாம் அறியாமல் இருக்கும் சொத்தாகும் இறைவன் எல்லைகளும், வேற்றுமைகளும் இல்லாத அகண்டமான ஓருமையாவார்.இயற்கையிலும், அண்டத்திலும், மிருகங்களிலும், மனிதர்களிலும், செடி கொடிகளிலும், மரங்களிலும், பறவைகளிலும், ஓரோர் அணுவிலும், இறையாற்றல் நிறைந்து ததும்பி நிற்கிறது. உயிருள்ளதும் உயிரற்றதுமான அனைத்தும் இறைமயமேயாகும்.இந்த உண்மையை நாம் முழுவதுமாக அறிந்தால்,நம்மால் நம்மீதும், மற்றவர் மீதும் இந்த உலகின் மீதும் அன்பு செலுத்த மட்டுமே இயலும். அன்பின் முதல் அலையை நாம் நம்மிடமிருந்துதான் தோற்றுவிக்கவேண்டும். அமைதியாக உள்ள ஒரு குளத்தில் […]

கேள்வி: அம்மா பாரதம் மற்றும் வெளிநாடுகளில் பல வருடங்களாகப் பயணம் செய்து வருகிறீர்கள். இக்காலத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? அம்மா: குழந்தைகளே, அம்மாவுக்கு பாரதம், அமெரிக்கா, ஐரோப்பா என்ற வேறுபாடுகள் எதுவுமில்லை. அங்குள்ளவர்களும் இங்குள்ளவர்களும் அம்மாவின் குழந்தைகளே. அதேசமயம் வெளிநாடுகளுக்கும் பாரதத்திற்கும் இடையில் கலாசார வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு நாட்டின் நிலவளமும் செல்வ நிலையும் மக்களின் மனவளர்ச்சியுமே அங்குள்ள குடிமக்களின் கலாசாரத்திற்கு வடிவம் கொடுக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் வேறுபாடுகள் உண்டு என்றே கூறலாம். […]