Tag / அமைதி

பக்தை : அம்மா, வாழ்வில் அமைதியும், நிம்மதியும் இல்லை துன்பமே நிறைந்துள்ளது. இதனால் இப்படி ஒரு வாழ்வு எதற்கு எனத்தோன்றுகிறது. அம்மா: மகளே, உன்னிடமுள்ள அகங்காரத்தான் உனது துன்பத்திற்குக் காரணம். அமைதிக்கும், நிம்மதிக்கும் உறைவிடமாக விளங்கும் இறைவன் உன் உள்ளத்தில் இருக்கிறார். ஆனால், அகங்காரத்தை நீக்கி சாதனை செய்தால்தான் அதை அறிய முடியும். குடையைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு இனி வெயிலில் ஒரு அடி வைக்கக்கூட என்னால் முடியாது, நான் தளர்ந்துபோய்விட்டேன் என்று கூறுவது போலிருக்கிறது உனது பேச்சு. […]

கேள்வி: அம்மா பாரதம் மற்றும் வெளிநாடுகளில் பல வருடங்களாகப் பயணம் செய்து வருகிறீர்கள். இக்காலத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? அம்மா: குழந்தைகளே, அம்மாவுக்கு பாரதம், அமெரிக்கா, ஐரோப்பா என்ற வேறுபாடுகள் எதுவுமில்லை. அங்குள்ளவர்களும் இங்குள்ளவர்களும் அம்மாவின் குழந்தைகளே. அதேசமயம் வெளிநாடுகளுக்கும் பாரதத்திற்கும் இடையில் கலாசார வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு நாட்டின் நிலவளமும் செல்வ நிலையும் மக்களின் மனவளர்ச்சியுமே அங்குள்ள குடிமக்களின் கலாசாரத்திற்கு வடிவம் கொடுக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் வேறுபாடுகள் உண்டு என்றே கூறலாம். […]