குழந்தைகளே, நல்ல சிந்தனைகளையும், குணங்களையும் வளர்த்து, மனதைத் தூய்மையுள்ளதாகவும், பரந்ததாகவும் ஆக்குவதுதான் எல்லா ஆன்மிக சாதனைகளின் லட்சியமாகும். இறைகுணங்கள் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. ஆனால், இன்று அவை விதை வடிவில் உள்ளன. சாதனையின் மூலம் நாம் அவற்றை வளர்க்கவேண்டும். இறைவனின் விக்கிரகத்தையோ, சித்திரத்தையோ வழிபடும் ஒரு பக்தன், அதில் எல்லாம்வல்ல இறைவனையே தரிசிக்கிறான். அன்பு வடிவினனும், கருணை வடிவினனுமான இறைவனை வணங்கும் பக்தனின் மனதிலும் அந்தக் குணங்கள் நாளடைவில் வளர்கின்றன. இவ்விதமாக, அனைத்திலும் இறைவனைத் தரிசித்து, அன்புசெய்யவும், […]