அம்மாவின் 66வது அவதாரத் திருவிழா அருளுரை 27 செப்டம்பர் 2019, அமிர்தபுரி – அமிர்தவர்ஷம் 66 குழந்தைகளே, அனைவரும் ஒற்றுமையுடனும், அன்புடனும் இங்கே குழுமியிருப்பதைக் காணும்போது, பல நிறமுள்ள மலர்களால் அழகாகக் கட்டப்பட்ட மனங்கவரும் பூமாலையைப் போல் அம்மாவுக்குத் தோன்றுகிறது. உங்களது இவ்வுள்ளமும், தொண்டு மனப்பான்மையும் மேன்மேலும் வளர்ந்து ; பரந்ததாகி. மக்களுக்குப் பயன்படட்டும் என்று அம்மா பரமாத்மாவிடம் வேண்டிக்கொள்கிறார். இது ஒரு மகிழ்ச்சியின் நிமிடம் என்றாலும், உலகின் பல்வேறு இடங்களிலும் நடக்கும் இயற்கைச் சீற்றங்களாலும், கலவரங்களாலும், […]