டோக்கியோ, ஜப்பான், ஜூலை 23

இந்த ஆண்டு மார்ச் 11ல் ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியில் பாதிக்கப் பட்டோருக்கு நிவாரண நிதியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை அம்மா அறிவித்தார். குறிப்பாக சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவுக்காக இது அளிக்கப்பட்டது.

“அகிலத்தை அரவணைக்கும் அம்மா ” (Embracing the World ) என உலகெங்கும் அறியப்படும் அமெரிக்காவில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தின் அகில உலக அறக்கட்டளை மூலமாக எனும் இந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இந்த அறிவிப்பு ஷினாகாவா எனும் நகரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் திரு. கெய்க்கி ஸோமா ( மியாகி கவர்னரின் பிரதிநிதி) மற்றும் மியாகியின் துணை இயக்குநர் அவர்களின் முன்னிலையில் அம்மாவால் வழங்கப்பட்டது.

 

அம்மாவின் பக்தர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் சுனாமி நிகழ்ந்த (மார்ச் 13) இரு தினங்களுக்குப் பின் தமது நிவாரணப் பணிகளைத் தொடங்கினர். அவர்கள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தேவையற்ற குப்பை கூளங்களை அகற்றினர். பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும் தூய்மைப் படுத்தினர். மேலும் பாதிக்கப் பட்டோருக்கான சுனாமி நிவாரண மையங்களில் உணவு , வீட்டு உபயோகப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை வழங்குவதன் மூலம் சேவை செய்தனர். மேலும் பாதிக்கப்பட்டோருக்கு ஆன்மிகத்தின் மூலமாகவும் உளவியல் மூலமாகவும் ஆறுதல் அளிக்கப்பட்டது.