புதிய குழந்தைகள் காப்பகத் திறப்பு விழா

ஏப்ரல் 5, கென்யா
கென்யாவில் புதிய குழந்தைகள் காப்பகம் 5-4-2011-ல் திறந்து வைக்கப் பட்டது. கென்யக் குடியரசின் துணைக் குடியரசுத்தலைவர்
மேன்மைமிகு கலோஜோ மிஸியோக்கா மேற்கூறிய காப்பகத்தை அம்மாவின் முன்னிலையில் 5-4-2011-ம் நாளன்று திறந்து வைத்தார். இதைக் கென்யாவின் மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை கட்டியுள்ளது. இதையொட்டி ஆதிநதி (Adhi river) என்னுமிடத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அந்நாட்டின் விளையாட்டு மற்றும் கலாசாரத் துறையின் இணையமைச்சர் திருமதி. வவின்ய நிதேதி, பாராளுமன்றத்தின் பல உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், அந்நாட்டின் புகழ்மிக்க பாடகர் எரிக் வெய்னைனா முதலிய பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இக்குழந்தைகள் காப்பகத்தில் இப்போது 108 குழந்தைகள் வாழ்வதற்கான வசதிகள் உள்ளன.

இதே நாளில் அமிர்தா தொழிற்பயிற்சி மையம், அமிர்தா குடிநீர் வழங்கும் திட்டம் ஆகிய இரு சேவை அமைப்புகளும் ஆரம்பித்து வைக்கப் பட்டன. இது அருகில் இருக்கும் சேரிக் குடியிருப்பான ஜேம் சிட்டியில் வாழும் மக்களுக்குச் சேவை செய்யும். இந்த மையத்தின் முதலாவது குழுவில் 50 பேர் அடிப்படை கணினி இயக்கத்தில் பயிற்சி பெறுகின்றனர்.

குழந்தைகள் காப்பகத்தைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் மஸாய் என்னும் பழங்குடியினார் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வறட்சியால் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்குத் தினசரி தூய குடிநீர் அமிர்தா குடிநீர் வழங்கும் திட்டத்தின் மூலம் தரப் படுகிறது.