கொலுவிருக்கிறாள் அம்மா கொலுவிருக்கிறாள்
கோமள வல்லியெனக் கொலுவிருக்கிறாள்
அமிர்தமயி தேவியெனக் கொலுவிருக்கிறாள்
ஆனந்த ஒளிசிந்தக் கொலுவிருக்கிறாள்

மலர்ந்த முகம் வாடாமல் கொலுவிருக்கிறாள்
மக்கள் தனை மடிசாய்த்துக் கொலுவிருக்கிறாள்
நிலவுமுகச் சிரிப்புடனே கொலுவிருக்கிறாள்
நித்தமவள் பௌர்ணமியாய் கொலுவிருக்கிறாள்

அங்கயற்கண்ணி அவள் கொலுவிருக்கிறாள்
எங்கும் நிறைஜோதியாய்க் கொலுவிருக்கிறாள்
இன்பமெல்லாம் பொங்கப் பொங்கக் கொலுவிருக்கிறாள்
இனிமையெல்லாம் தங்கத்தங்கக் கொலுவிருக்கிறாள்

தினம் தினம் தேவியவள் கொலுவிருக்கிறாள்
திக்கெட்டும் காவலாய்க் கொலுவிருக்கிறாள்
மனமகிழ மணங்கமழ கொலுவிருக்கிறாள்
மாதவர்கள் போற்றி நிற்கக் கொலுவிருக்கிறாள்

-திருமதி. மீனாட்சி பழனியப்பன்