பக்தை: அம்மா, எனக்குத் தெரிந்த எல்லாத் தெய்வங்களையும் வணங்கினேன். சிவனையும், தேவியையும், மற்ற பல மந்திரங்கள் மூலம் பல தெய்வங்களையும் வழிபட்டேன். ஆனால், அவற்றால் ஒரு நன்மையும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அம்மா: மகளே, ஒரு மனிதன் தாகத்தால் வருந்தினான். அருகில் எங்கும் குடிநீர் கிடைக்கவில்லை. யாரோ ஒருவர், இந்த இடத்தில் தோண்டினால் விரைவில் நீர் கிடைக்கும் என்று கூறினார். உடனே அவன் அங்கு சிறிய குழி தோண்டினான். தண்ணீர் கிடைக்கவில்லை சிறிது தூரத்தில் மற்றொகு குழி தோண்டினான். […]