நாடு முழுவதும் சொற்பொழிவுகளும் பேருரைகளும் நடக்கும் காலக்கட்டம் இது. ஆன்மிகப் பேருரை, கலாசார விரிவுரை, அரசியல் கூட்டம், சமயச் சொற்பொழிவு, நாத்திகச் சொற்பொழிவு- அதிகம் சொல்வானேன்?! ஒவ்வொருவரும் பேச ஏதாவது ஒரு விஷயம் உள்ளது. உலகில் எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் உரையாற்ற அதிகாரம் இருப்பதாகவே அனைவரும் எண்ணுகின்றனர். இதைச் சொல்லும் போது அம்மாவுக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒருமுறை ஒரு சிறுவன், ” எங்கள் ஆசிரியர் எவ்வளவு பெரிய மகான் என்று தெரியுமா? என்று […]