கேள்வி: அம்மா அத்வைதம்தான்  உண்மையெனில் பாவதரிசனத்தின்தேவையென்ன? அம்மா: அத்வைதம்   பேசும் வேதாந்திகளில்  யாரும் ஆடை அணியாமல் நடப்பதில்லையே? அவர்களும் உடை அணிகிறார்கள், உண்கிறார்கள, உறங்குகிறார்கள், அவை உடல் வாழ்க்கைக்குத் தேவை என்பது அவர்களுக்குத் தெரியும். சமூகத்தின் இயல்புக்கு ஏற்ப உடை அணிகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்தின் தேவைக்கேற்ப மகான்கள் வருகிறார்கள். ஸ்ரீராமர் வந்தார்:. ஸ்ரீ கிருஷ்ணர் வந்தார் ஸ்ரீராமரை போல் ஸ்ரீகிருஷ்ணர் இருக்க வேண்டும் என்று சொல்வதில் பொருளில்லை. மருத்துவரிடம் பலவித நோயாளிகள் வருவார்கள் எல்லாருக்கும் ஒரே மருந்தை […]