Category / செய்தி

புதிய குழந்தைகள் காப்பகத் திறப்பு விழா ஏப்ரல் 5, கென்யா கென்யாவில் புதிய குழந்தைகள் காப்பகம் 5-4-2011-ல் திறந்து வைக்கப் பட்டது. கென்யக் குடியரசின் துணைக் குடியரசுத்தலைவர் மேன்மைமிகு கலோஜோ மிஸியோக்கா மேற்கூறிய காப்பகத்தை அம்மாவின் முன்னிலையில் 5-4-2011-ம் நாளன்று திறந்து வைத்தார். இதைக் கென்யாவின் மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை கட்டியுள்ளது. இதையொட்டி ஆதிநதி (Adhi river) என்னுமிடத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அந்நாட்டின் விளையாட்டு மற்றும் கலாசாரத் துறையின் இணையமைச்சர் திருமதி. வவின்ய நிதேதி, பாராளுமன்றத்தின் […]

காலை 5 மணி அளவில் சூர்ய காலடி ஜெயசூர்யன் பட்டத்திரிபாடு அவர்கள் நடத்திய மஹா கணபதி ஹோமத்துடன் அம்மாவின் 57-வது பிறந்த நாள் விழா மங்களகரமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உலக அமைதிக்காக ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் மட்டும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அதற்குப் பின்னர் சுவாமி துரியாமிர்தானந்த புரி அவர்கள் விழாவை காலை 7-30 மணி அளவில் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். அப்போது சுவாமி அமிர்தசொரூபானந்தபுரி அவர்களின் ஆன்மிகச் சொற்பொழிவு […]

அமிர்தபுரி,செப்டம்பர் 22, மாநில அரசுகள் மற்றும் பிறதொண்டு நிறுவனங்களின் உதவியும் ஒத்துழைப்பும் நமக்குக் கிடைக்குமானால் பாரதத்தில் உள்ள எல்லா பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் தூய்மைப் படுத்தும் பொறுப்பை நமது மடம் ஏற்கத் தயாராக இருப்பதாக அம்மா கூறினார். “பாரதம் வளரும் நாடாகும்.அதன் வளர்ச்சி பல்வேறு துறைகளிலும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது ” என்று கூறுகின்றனர். “ஆனால் சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களில் நாம் இன்னும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளோம். நமது நாட்டில் […]