செப்டம்பர் 26 – சிறப்பு நிகழ்ச்சிகள் 60 ஆண்டு நிறைவு காணும் அம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், அமிர்தபுரியில் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் வள்ளிக்காவில் அமைந்துள்ள அமிர்த விஸ்வ வித்யாபீடம் (பொறியியல் கல்லூரி) வளாகத்தில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் துவங்கியது. விடியற்காலை 5:30 முதல் மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கி, தொடர்ந்து லலிதா சஹஸ்ரநாம பாராயணமும், பஞ்சாரி மேள வாத்திய முழக்கமும் நிகழ்ந்தன. தொடர்ந்து, அமிர்தபுரி ஆசிரமத்திலிருந்து, அம்மாவின் பிறந்தநாளுக்கென வந்து […]
Category / செய்தி
செப்டம்பர் 27 (பிறந்த தினம்) அம்மாவின் 60ஆவது திருஅவதார தினமான இன்று, காலை 5 மணி முதல் மஹா கணபதி ஹோமமும், தொடர்ந்து லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தன. காலை 8 மணியளவில் பத்மஸ்ரீ ஷோபனா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் அதன் முடிவில், அம்மாவின் மூத்த துறவிச் சீடராகிய சுவாமி அமிர்த சொரூபானந்தபுரியின் உரையும் தொடர்ந்தன. தமது உரையில் சுவாமிஜி, அம்மாவுடன் தமக்கு 37 ஆண்டுகாலமாகக் கிடைத்த அனுபவங்களும் ஏதோ ஒரு நொடிப்பொழுதில் பௌதீகக் கால வரையறைகளுக்கு […]
செப்டம்பர் 25 – 26 கருத்தரங்கம் – ‘நமது கிராமங்கள், நமது உலகம் – நாம் எதை வழங்கப் போகிறோம்?’ முன்னாள் ஜனாதிபதியும் ஏவுகணைத் தொழில்நுட்ப விஞ்ஞானியுமாகிய டாக்டர் ஏ .பி. ஜே அப்துல் கலாம் அவர்கள் துவைக்கிவைத்த இக்கருத்தரங்கத்தில் கிராமங்களின் ஆரோக்கியமான முன்னேற்றத்திலும் உலகின் நலனிலும் பெரிதும் அக்கறையும் ஆர்வமும் கொண்ட பல அறிஞர்களும், விஞ்ஞானிகளும், கல்வியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் கலந்துகொண்டு மிக ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் கனவுகளையும் பகிர்ந்துகொண்டனர். அமிர்தபுரியின் அமிர்த விஸ்வவித்யாபீடத்துப் பொறியியற் கல்லூரி […]
செப்டம்பர் 22 – 25 சண்டிகா மஹா யாகம் அம்மாவின் 60ஆவது திருஅவதார தின வைபவத்தின் ஒரு அங்கமாக, ஸ்ரீ சண்டிகா மகா யாகம் அமிர்தபுரி ஆசிரமத்தில் மிகச் சிறப்பாக 4 நாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது. கொல்லூர் மூகாம்பிகை, மைசூர் சாமுண்டேஸ்வரி கோவில் அர்ச்சகர்களாகவும் வேத விற்பன்னர்களாகவும் உள்ள அனுபவமிக்க ரித்விக்குகளால் இந்த மஹா யாகம் பாரம்பரியச் சிறப்புடன் நடத்தப்பெற்றது. செப்டெம்பர் 22 ஆம் தேதி காலை மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது இந்த யக்ஞம். சுமார் […]
ஓம் அமிர்தேஸ்வர்யை நம: அன்புடையீர், அம்மா – நமது தாய், குரு என்பதற்கு மேலாக லட்சக்கணக்கான மக்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்கி வருகிறார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மனிதகுலத்திற்கு சேவை செய்வதுடன் ஞானம் பகர்ந்தும் வலிமையையும் அளித்து மிகச்சிறந்த தூண்டுகோலாக அம்மா விளங்குகிறார். அம்மாவின் வாழ்வு எப்போதும் நமக்கு நிலையான அன்பு, அமைதி, கருணை, தன்னலமின்மை போன்ற அனைத்து நற்பண்புகளையும் ஒருங்கே நமக்கு நினைவூட்டுகிறது. அம்மாவின் அன்பின் மூலம் வெளிப்படும் அரிய செயல்கள், மன வலிமை, […]
அம்மாவின் 58 வது பிறந்த நாள் விழா காலை 5 மணி அளவில் சூர்ய காலடி ஜெயசூர்யன் பட்டத்திரிபாடு அவர்கள் நடத்திய மஹா கணபதி ஹோமத்துடன் மங்களகரமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உலக அமைதிக்காக ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் மட்டும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதற்கு பின்னர் சுவாமி துரியாமிர்தானந்த புரி அவர்கள் விழாவை காலை 7-30 மணி அளவில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது சுவாமி அமிர்தசொரூபானந்தபுரி அவர்களின் […]
டோக்கியோ ஜூலை 25, 2011 டோக்கியோ நகரில் அம்மாவின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது அந்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பலர் ஆறுதலையும் அறிவுரையையும் நாடி அம்மாவிடம் வந்திருந்தனர். தாங்கள் அனுபவித்த துயரத்தை அம்மாவிடம் கூறிய போது துக்கம் தாளாமல் வாய்விட்டு அழுதனர். அம்மா அவர்களை அணைத்து ஆறுதல் கூறினார். இவர்களது வேதனையையும் துயரையும் கவனித்த அம்மா பாதிக்கப்பட்ட பகுதியையும் ஏதாவது ஒரு நிவாரண முகாமையும் பார்வையிடத் தீர்மானித்தார். டோக்கியோ நிகழ்ச்சி அதிகாலை 5மணிக்கு நிறைவுற்றது. அதற்குப் பிறகு அம்மா […]
டோக்கியோ, ஜப்பான், ஜூலை 23 இந்த ஆண்டு மார்ச் 11ல் ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியில் பாதிக்கப் பட்டோருக்கு நிவாரண நிதியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை அம்மா அறிவித்தார். குறிப்பாக சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவுக்காக இது அளிக்கப்பட்டது. “அகிலத்தை அரவணைக்கும் அம்மா ” (Embracing the World ) என உலகெங்கும் அறியப்படும் அமெரிக்காவில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தின் அகில உலக அறக்கட்டளை மூலமாக எனும் இந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. […]