இன்று மனிதர்கள் ‘நடமாடும் விபத்துக்களாகவே’ மாறிக்கொண்டிருக்கிறார்கள்

இன்று மனிதர்கள் ‘நடமாடும் விபத்துக்களாகவே’ மாறிக்கொண்டிருக்கிறார்கள். இயற்கை சீற்றங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.இருப்பினும் அவை ஏற்படும் முன்பே அறியவல்ல தொழில்நுட்ப வசதிகள் இன்று இருக்கின்றன. ஆனால், மனித மனதில் ஏற்படவல்ல பேரழிவுகளை முன்பே தெரிவிக்கக்கூடிய இயந்திரத்தை இதுவரை அறிவியல் கண்டுபிடிக்கதொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்க இயலவில்லை. புவியின் வெப்பம் அதிகரித்தல், பருவ நிலை மாற்றங்கள், மேலும், மனிதன் பூமி மற்றும் இயற்கையுடைய எதிர்காலம் போன்றவற்றைப்பற்றி ஆராயவும்,பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கவும், மாநாடுகளும், விவாதங்களும், உயர்மட்ட கூட்டத்தொடர்களும்  உலகெங்கும் நடைபெறுகின்றன. ஆனால், மனித மனதின் வெப்ப நிலை அபாயகரமான விதத்தில் உயர்கிறது. மனதுள் பருவநிலை மாற்றங்கள் அபாயகரமான விதத்தில் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட அபாயங்களைக் குறித்து  யாரும் ஆழமாக சிந்திப்பதில்லை.  உயர்மட்ட விவாதங்களும், தீர்வு காணல்களும்,  எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பிரச்னைகளைக்குறித்தே  ஆகும். உலகெங்குமுள்ள மனித இனம், அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்ப்பதற்கான முயற்சி மெல்லத்தான் ஏற்படுகிறது.

பயம் மற்றும் மன அழுத்தம்  

இன்று பயம் மற்றும் மன அழுத்தமே வாழ்வின் அடித்தளமாகிவிட்டன.எல்லோரும் மன அழுத்தம் இல்லாத வாழ்வைத்தான் விரும்புகிறார்கள். ஆனால், பலரும் இலவசமாகவே மன அழுத்தத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். வாழ்வின் சூழ்நிலைகள் மாறிக்கொண்டேயிருக்கும்.‘மாற்றம்’ ஒன்று மட்டுமே இயற்கையின் மாறாத விதிமுறையாகும். ஆனால், நமது மனதும், மனோபாவமும்தான் அனுபவங்களை மகிழ்வுள்ளதாகவோ, துன்பம் நிறைந்ததாகவோ மாற்றுகின்றன. மனதை கட்டுப்படுத்த இயலாத வரை துன்பம் நம்மை துரத்திக்கொண்டேயிருக்கும்.  ஆனால் மனது நமது கட்டுப்பாட்டில் வரும் பொழுது, எந்த பேரிடராலோ, இயற்கைச் சீற்றத்தாலோ, தீய அனுபவத்தாலோ, நம்மை துன்பத்தில் ஆழ்த்தவோ, நலிவடையச்   செய்யவோ இயலாது. உண்மையில் நன்றியுணர்வுதான் மகிழ்ச்சியின் அடிப்படை. மனதில் நன்றியுணர்வு நிறையும்போது தானாகவே இன்பம் ஏற்படும். அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு அனுபவத்தையும், சரியான முறையில் ஆராய்ந்து பார்த்தால், மகிழ்ச்சியானது, நன்றியுணர்வை மனதில் ஏற்படுத்த வேண்டுமென்றில்லை. அதற்கு மாறாக நன்றியுணர்வானது வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்ற உண்மை புரியும்.

–அம்மாவின் 63 ஆம் அவதாரத்திருநாள் அருளுரையிலிருந்து