ஞானமின்றி நாம் எந்த செயலைப் புரிந்தாலும் அது நம்மையே நாம் இழப்பதைப் போன்றதாகும். நாம் வாகனத்தை ஓட்ட கற்றபின் ஓட்டினால் 98% சென்றடைய வேண்டிய லட்சியத்தை அடைவோம். ஆனால் வாகனத்தை ஓட்ட கற்காமல் ஓட்டினால் அது நம்மை மருத்துவமனைக்கே கொண்டு செல்லும். ஞானத்துடன் புரியும் செயலானது வரைபடத்தின் உதவியுடன் பயணம் செய்வதற்கு நிகரானது. ஞானமின்றி செயல் புரிந்தால் அது நம்மை வழி பிறழச் செய்யும். வாழ்வில் தன்னம்பிக்கை மிகவும் இன்றியமையாததாகும். இருள் நிறைந்த வழியே தனியாகச் சென்றால் நமக்கு அச்சமேற்படும். ஆனால் நம்முடன் ஒரு போலீஸ்காரர் இருக்கிறார் என்று எண்ணும்போது அந்த அச்சமானது அகன்றுவிடும்.இதுபோல் இறைவன் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார் எனும் உண்மையை உணரும்பொழுது அனைத்து அச்சங்களும் நம்மைவிட்டு அகன்றுவிடும். அந்த நம்பிக்கையானது ஒரு வடிகட்டியைப் போன்றதாகும். அது நம்முள்ளிருக்கும் அனைத்து தீமைகளையும் அகற்றிவிடும்.


–அம்மாவின் 63 ஆம் அவதாரத்திருநாள் அருளுரையிலிருந்து