ஓம் அமிர்தேஸ்வர்யை நம:

av60 tamil

அன்புடையீர்,
அம்மா – நமது தாய், குரு என்பதற்கு மேலாக லட்சக்கணக்கான மக்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்கி வருகிறார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மனிதகுலத்திற்கு சேவை செய்வதுடன் ஞானம் பகர்ந்தும் வலிமையையும் அளித்து மிகச்சிறந்த தூண்டுகோலாக அம்மா விளங்குகிறார். அம்மாவின் வாழ்வு எப்போதும் நமக்கு நிலையான அன்பு, அமைதி, கருணை, தன்னலமின்மை போன்ற அனைத்து நற்பண்புகளையும் ஒருங்கே நமக்கு நினைவூட்டுகிறது. அம்மாவின் அன்பின் மூலம் வெளிப்படும் அரிய செயல்கள், மன வலிமை, சுயநலத்தியாகம் முதலியவை எண்ணற்றோருக்கு தன்னலமற்ற சேவையில் ஈடுபட ஒரு தூண்டுகோலாக இருக்கிறது.
அம்மா மனிதகுல மேன்மைக்காக எண்ணற்ற சேவைத்திட்டங்களை இந்தியாவிலும் அகிலத்தை அரவணைத்தல் (Embracing the world ) எனும் பெயரில் வெளிநாட்டிலும் செயல்படுத்தி வருகிறார்.
நமது மடம் ஐ.நா சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சேவைக்கான விருது பெற்ற இந்திய தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுள் ஒன்றாகும்.

அமிர்தவர்ஷம் – 60

அம்மாவின் 60-ஆம் பிறந்தநாள் விழா அமிர்தபுரியிலுள்ள அமிர்தா கல்லூரியில் செப்டம்பர்- 26 & 27 ஆகிய நாட்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள இணையதள அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அமிர்த வர்ஷம் — 60 – நிகழ்ச்சி நிரல்

செப்டம்பர் 25, புதன்
இரவு 9 மணி முதல் 12 மணிவரை — உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள்

செப்டம்பர் 26, வியாழன்
காலை 5மணி — 6.30 மணி வரை — மஹாகணபதிஹோமம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை
காலை 8மணி — 9.00 மணி வரை – கொடியேற்றம், செண்டைமேளத்துடன் கேரள பாரம்பரிய முறையில் வரவேற்பு

காலை 9 மணி — 10 மணி வரை — வரவேற்பு நடனம் — இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் நடன கலைஞர்களது பாரம்பரிய கலாசாரச் சிறப்பு நடனம்

காலை 10மணி — மதியம் 1 மணி வரை — பெண்கள் முன்னேற்றத் திட்டங்களின் தொடக்கம் மற்றும் பல்வேறு செயல் திட்டங்கள்

மதியம் 1 மணி — மாலை 5 மணி வரை – அம்மாவின் தரிசனம் மற்றும் உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள்

மாலை 6.30 மணி — 8.30 மணி வரை — அம்மாவின் பஜனை

செப்டம்பர் 27, வியாழன்
காலை 5மணி — 6.30 மணி வரை — மஹாகணபதிஹோமம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை

காலை 7.45 மணி — 8.15 மணி வரை — சுவாமி அமிர்தசொரூபானந்த புரி அவர்களின் ஆன்மிக உரை

காலை 9 மணி — 11 மணி வரை — அம்மாவின் திருப்பாத பூஜை மற்றும் அம்மாவின் அருளுரை

காலை 11மணி — மதியம் 1 மணி வரை — அமிர்தகீர்த்தி விருது வழங்கல்,
ஏழைகளுக்கான புதிய நலத்திட்டங்களின் துவக்கம் :
· ரூ. 50 கோடி செலவில், இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட உத்தர்கண்ட் மாநிலத்தில் 500 வீடுகளைக் கட்டிக் கொடுத்தல்.
· சமூக மேம்பாட்டைக் கருத்தில் கொண்ட நவீன தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள்.
·50 கோடி ரூபாய் செலவில் ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை.
·‘அமிர்தநிதி ’ விதவைகளுக்கான உதவித்தொகை மற்றும் ’ வித்யாமிர்தம் ’ கல்வி உதவித்தொகையை விரிவுபடுத்துதல்
·ஏழைப்பெண்களுக்கான இலவச திருமணங்கள்.
· ஏழைகளுக்கான ஆடைதானம்
. புதிய ஆசிரம நூல்களின் வெளியீடு

மதியம் 1 மணி முதல் —- அம்மாவின் தரிசனம் தொடங்குதல்

சிறப்பு நிகழ்ச்சிகள் :
செப்டம்பர் 24, 25 & 26 — அதிகாலை முதல் மாலை வரை உலக அமைதி மற்றும் நன்மைக்கான சிறப்பு மஹா சண்டி ஹோமம்

செப்டம்பர் 25 & 26 — நமது கிராமம், நமது உலகம் – ” நம்மால் என்ன செய்ய முடியும்? ” — அகில உலக விஞ்ஞானியர் மாநாடு — உலகம் முழுவதுமுள்ள மிகச்சிறந்த விஞ்ஞானிகள், சமூகத் தலைவர்கள், தலைசிறந்த கல்வியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்களின் பங்கேற்பு .

குறிப்பு:
இது பற்றி மேலும் விவரங்கள் அறிய www.amritapuri.org, www.amritavarsham.org ஐத் தொடர்புகொள்ளவும்.
மின்னஞ்சல் முகவரி: celebration (at) amritavarsham.org, info (at) amritapuri.org
தொலைபேசி : +91 9497714870, +91 (476) 2895288, 2896399

அனைவரும் வருக!! அம்மாவின் அருளைப் பெறுக !!